82 வயது முதியவருக்கு இரு இதய வால்வுகள் + பேஸ்மேக்கர் கருவி

82 வயது முதியவருக்கு இரு இதய வால்வுகள் + பேஸ்மேக்கர் கருவி
June 07 07:52 2024 by admin Print This Article

ஒன்றுக்கும் அதிகமான இதய வால்வு பாதிப்பு நோயுள்ள 82 வயதான முதியவருக்கு வெற்றிகரமான சிகிச்சையை வழங்கியிருக்கிறது தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை சங்கிலித்தொடர் நிறுவனமாகத் திகழும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஓர் அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை. ஒரு டிரான்ஸ்கதீட்டரைப் பயன்படுத்தி இரு ‘வால்வில் வால்வு’ என்ற வால்வு மாற்று சிகிச்சை செயல் முறையானது இந்தியாவில், இவ்வகையில் முதன்முறையாக செய்யப்பட்டிருக்கிறது. குறைவான இதயத்துடிப்பு பிரச்னையை சரிசெய்ய இதே செயல்முறையில் டிரான்ஸ்கதீட்டர் வழியாக ஒரு பேஸ்மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது.

கோவையைச் சேர்ந்த 82 வயதாகும் திரு. பாலகிருஷ்ணன், ஒன்றுக்கும் மேற்பட்ட இதய வால்வு பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். தீவிர பெருநாடிவாயில் கசிவு, இதயத்தின் இடப்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வில் கசிவு மற்றும் முத்தடுக்கிதழ் வால்வில் மிதமான கசிவு ஆகிய பிரச்னைகளோடு கடுமையான நுரையீரல் ரத்த அழுத்தமும் (நுரையீரல்களின் தமனிகளிலும் மற்றும் இதயத்தின் வலது பகுதியிலும் அதிக அழுத்தம்) இவருக்கு இருந்தது. ‘கசியும் வால்வு நோய்’ என்றும் அறியப்படுகின்ற இப்பாதிப்பில் இதய வால்வு முறையாக மூடாத நிலையில் இருப்பதால், ரத்த ஓட்டத்தில் கசிவை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தத்தைத் திறம்பட பம்ப் செய்வதற்கு இதயம் அதிக அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுகிறது. இந்நிலை தொடருமானால், காலப்போக்கில் இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு ஏற்படக்கூடும்.

சென்னை காவேரி மருத்துவமனையின், இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். அனந்தராமன், இந்நோயாளியின் கடந்த கால பாதிப்பு வரலாறு குறித்து விளக்குகிறார்… “பெருநாடிவாயில் மற்றும் மிட்ரல் வால்வு ஆகிய இரண்டிலும் கடுமையான கசிவு பிரச்சனையோடு முத்தடுக்கிதழ் வால்விலும் மிதமான கசிவு பிரச்னை இந்நோயாளிக்கு இருந்திருக்கிறது. 2012ம் ஆண்டில் வால்வு மாற்று அறுவைசிகிச்சை இவருக்கு மேற்கொள்ளப்பட்டது. பெருநாடிவால்வு, 21 மி.மீ. பயோபுரோஸ்தடிக் வால்வைக் கொண்டும் மற்றும் மிட்ரல் வால்வு 31 மி.மீ. பயோபுரோஸ்தடிக் வால்வைக் கொண்டு மாற்றப்பட்டன. மிதமான பாதிப்பிருந்த முத்தடுக்கிதழ் வால்வு, அங்கு சரி செய்யப்பட்டது. இடது முன்புறத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் தமனியின் முன்பகுதியில் ஒரு பைபாஸ் ஒட்டு சிகிச்சையும் இவருக்கு செய்யப்பட்டிருந்தது. இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் இவரது இதயத்தின் செயல் பாடு கணிசமாக குறைந்திருந்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு தொடர் மருத்துவ சிகிச்சை இவருக்கு அவசியமாக இருந்தது.

இந்த ஆண்டில் சுவாசப் பிரச்னைகளை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 4 முதல் 6 மாதங்கள் கால அளவில் இது மிகவும் மோசமானதால் அவரால் எழுந்து நடக்கவோ, முதுகைச் சாய்த்து சமநிலையில் படுக்கவோ இயலவில்லை. எங்களது மருத்துவக் குழுவினர் அவரது தற்போதைய நிலையையும், அவரது கடந்த கால மருத்துவ வரலாறையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இவருக்குப் பொருத்தப்பட்டிருந்த பெருநாடி வாயில் மற்றும் மிட்ரல் வால் வுகள் மிகவும் குறுகியிருப்பதை எக்கோ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவரது முதிர்ந்த வயதையும், குறைந்திருக்கும் இதய செயல்திறன் மற்றும் கடந்தகால

அறுவைசிகிச்சையையும் கருத்தில் கொண்டபோது இதிலுள்ள மிக அதிக இடர்வாய்ப்புகளின் காரணமாக அதே மாதிரியான அறுவைசிகிச்சையை மீண்டும் செய்ய இயலாது என்ற முடிவு எட்டப்பட்டது. இதயவியல் நிபுணர்கள் குழு இது குறித்து நடத்திய முழு கலந்துரையாடலுக்குப் பிறகு இதுவே இவரது உடல்நிலைக்கு உகந்த சரியான தீர்வாக இருக்கும் என்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டதால் பெருநாடி வால்வு மற்றும் மிட்ரல் வால்வு ஆகிய இரண்டுக்கும் ஒரு டிரான்ஸ்கதீட்டரைப் பயன்படுத்தி (மிகக் குறைவான ஊடுருவலுடன்) ‘வால்வில் வால்வு மாற்று சிகிச்சையை நாங்கள் இம்முதியவருக்கு செய்தோம். கூடுதலாக, இவரது இதயத்தில் நாடித்துடிப்பில் பிரச்னை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதற்கு தீர்வுகாண டிரான்ஸ்கதீட்டர் பேஸ்மேக்கரைப் (மைக்ரா) பயன்படுத்தி ஒரு பேஸ்மேக்கரையும் இவருக்கு நாங்கள் பொருத்தினோம்” என்கிற டாக்டர் அனந்தராமன் மேலும் கூறுகிறார்.

“ஒரு வால்வில் வால்வு என்ற டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை செயல் முறை, இப்போது சரியாக செயல்படாத திசு வால்வைக் கொண்டு திறந்த நிலை இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டிருக்கின்ற நபர்களுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. வழக்கமான அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடுகையில், இப்புதிய சிகிச்சை செயல்முறையில் மிக வேகமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த முதியவர், சிகிச்சை செயல் முறைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது அவர் முன்பைவிட நன்றாக இருக்கிறார்” என்கிறார்.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இச்சிகிச்சையின் வெற்றி குறித்துப் பேசுகையில், “ஒரு டிரான்ஸ்கதீட்டர் மூலம் வால்வில் வால்வை மாற்றுகின்ற சிகிச்சை செயல்முறை மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பின்பற்றப்படுகிறது. திறந்த நிலை இதய அறுவைசிகிச்சையில் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு மிக பாதுகாப்பான சிகிச்சையாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனினும், டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை செயல்முறைகளில் அதிக அளவில் பிற இடர்களும் சிக்கல்களும் வரக்கூடும். நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் குழு மற்றும் சரியான உட்கட்டமைப்பு வசதியுள்ள மருத்துவமனை ஆகியவற்றால் மட்டுமே இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இச்சிகிச்சை செயல்முறையானது, இதயவியல் இடையீட்டுச் சிகிச்சையில் அனுபவம் மிக்க மருத்துவர் மற்றும் அவரது திறன்மிக்க குழுவினரின் நிபுணத்துவத்தின் கீழ் மிக பாதுகாப்பான இடமான ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அரங்கில் செய்யப்பட்டிருக்கிறது. நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு எமது இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் அனந்தராமன் மற்றும் குழுவினர் எடுத்திருக்கும் சிறப்பான முயற்சிகளை நான் மனமார பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

 

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.