புற்று நோய்

புற்று நோய்
June 27 05:13 2024 by admin Print This Article

அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிந்துகொள்வோம்!

இந்தியாவில் 2022-ம் ஆண்டு புதிதாக கண்டறியப்பட்ட புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் 14.6 லட்சம். இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே உள்ளது. மேலும் இறப்புகளின் எண்ணிக்கை 8.08  லட்சம்.புற்று நோயை பற்றிய விழிப்புணர்வு இருந்த போதிலும், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும்  உயர்ந்து கொண்டே இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

இந்தியரில் வாழ்நாளில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புள்ளி விவரங்களின் படி, ஒரு லட்சம் பெண்களில், 103.6  பேருக்கும், ஒரு லட்சம் ஆண்களில் 94.1 பேருக்கும் புற்று நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களைப் பொறுத்தவரையில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், கர்ப்பப்பை புற்று நோய் இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதே நேரம், ஆண்கள் அதிகப்படியாக வாய்  புற்றுநோயாலும், அடுத்து நுரையீரல்  மற்றும் இரைப்பை புற்று நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏன் புற்று நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டே  போகிறது?

சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்று நோய் முதன்மையாகவும், மார்பகப் புற்று நோய் அடுத்தபடியாகவும் இருந்தது. ஆனால், தற்போதைய நகரமயமாதல், மேற்கத்திய பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறை மாற்றம் , உடற்பயிற்சியின்மை மற்றும் உடல்  பருமன், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தள்ளிப்போவது போன்ற காரணங்களால் மார்பகப் புற்று நோய் அதிகரித்து வருகிறது.

சுகாதாரமான   பழக்கவழக்கங்கள், HPV  தடுப்பூசி, ஆரம்ப நிலை நோய்த் தடுப்பு மற்றும் கண்டறிதல் மூலமாக கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்ப் பாதிப்பு கணிசமான அளவு குறைந்து உள்ளது.

ஆரம்ப  நிலை புற்று நோய்களைக் கண்டறிவது எப்படி?

  • மார்பக புற்று நோயை பொறுத்தவரையில், சிறிய அளவிலான கட்டியாக ஆரம்பித்து, பெரியதாகி, தோலில் புண் அல்லது அக்குள் நெறிக்கட்டிகள் போன்றவை ஏற்படலாம். மருத்துவ பரிசோதனை மற்றும் மேமோகிராம் பரிசோதனை மூலம் இதனை மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.
  • கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயை அதிக அளவிலான ரத்தப்போக்கு, வெள்ளைப் படுதல், மெனோபாஸுக்கு பிறகான  ரத்தப்போக்கு ஆகிய அறிகுறிகளை கொண்டு கண்டறியலாம்.
  • ஆண்களில் அதிகம் காணப்படும் வாய்ப் புற்று நோயானது நீண்ட நாள் ஆறாத வாய் அல்லது நாக்கில் உள்ள புண் அல்லது கட்டி ஆகிய அறிகுறிகளுடன் தென்படும்.
  • பெரும்பாலான புற்றுநோய்கள் பசியின்மை மற்றும் அதிகப்படியான எடை குறைவு போன்றவற்றை ஏற்படுத்தும்.
  • சிறுநீரில் ரத்தம் இருத்தல், மலத்தில் ரத்தம் இருத்தல் ஆகியவை சிறுநீர்ப்பாதை மற்றும் உணவுப்பாதை புற்று நோய்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறியக்கூடிய  பரிந்துரைக்கப்பட்டுள்ள  பரிசோதனைகள் என்னென்ன?

மேமோகிராம் பரிசோதனை:
40  வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை செய்யவேண்டும். மார்பகப் புற்று நோயை மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்,

பேப் ஸ்மியர்(PAP Smear): 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயை தடுக்க அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

கொலொனோஸ்கோபி(Colonoscopy): மலக்குடல் புற்று நோயை ஆரம்பநிலையில் கண்டறிய உதவும் பரிசோதனை இது.

நுரையீரல் CT ஸ்கேன்: இது அதிக அளவில் புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் செய்யப்படுகிறது. நுரையீரல் புற்று நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனை இது.

இவை அனைத்தும் அறிகுறிகள் எதுவும் இல்லாத நபர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகள். இதன் மூலம், அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே நோயைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

மேலும்  சில  பரிசோதனைகள்: மரபணு மாற்றம், பரம்பரை புற்று நோய் வழக்கம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து சில பரிசோதனைகள் செய்யப்படும்.

The different tests required for detecting blood-cancer

புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதில் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் புற்று நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். பெரும்பாலும் அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானதாக அமையும். மேலும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையை தவிர்த்து, அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளையும் தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக Stage I  மார்பகப் புற்று நோயாளிகளுக்கு 5 வருடம் உயிர்  வாழ்வதற்கான வாய்ப்பு 99 சதவிகிதம். இதுவே ஸ்டேஜ் II மற்றும்  III  நோயாளிகளுக்கு 86%  ஆகக் குறைகிறது. நோய் முற்றிய நிலையில் வருபவர்களுக்கு 30 சதவிகிதமாக குறைகிறது.

ஆரம்ப நிலையில் கண்டறியப்படாத பட்சத்தில், புற்று நோயானது கல்லீரல், எலும்பு மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் பரவி விடுகிறது. இதனால் மிக அதிக அளவிலான சிரமம் ஏற்படுகிறது; குணப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் இழக்க நேரிடுகிறது.

தற்போது புற்று நோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முனேற்றங்கள் என்ன?

தற்போதைய நவீன சிகிச்சை முறைகளான லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மூலம், மிகவும் துல்லியமாக சிகிச்சைபெற்று, குறுகிய காலத்தில் வீடு திரும்பலாம். மேலும் கீமோதெரபி  மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் முன்னேற்றத்தின் காரணமாக குறைந்த பக்கவிளைவுகளுடன் குணமடையலாம்.

Precision Medicine in Quaternary Care

ஆரம்ப நிலையில் கண்டறியப்படாத பட்சத்தில், புற்று நோயானது கல்லீரல், எலும்பு, நுரையீரல் போன்ற உறுப்புகளுக்குப் பரவி மிக அதிக சிரமத்தை அளிக்கும்; குணப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் இழக்க நேரிடும்.

அபாயங்களைக் குறைப்பது எப்படி?

நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், தினமும்  உடற்பயிற்சி, உடல் பருமனைத் தவிர்த்தல், புகையிலை, புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

 

 

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.