புற்றுநோய்… நம்பிக்கை தரும் நவீன சிகிச்சைகள்!

by admin | May 20, 2024 12:07 pm

நம்மூளை அறியாதது கண்ணுக்குத் தெரியாது என்று ஒரு பொன்மொழி உண்டு. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் அது வராமல் தற்காத்துக்கொள்ளவும் முடியும். ஆம்… புற்றுநோயை வெல்ல அதனைப் புரிந்துகொள்வது அவசியம். அதற்கு உடலைப் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம். ரத்தம், தசை மற்றும் எலும்புகளாலானது உடல் என்பதைத் தாண்டி, அதை நுட்பமாக ஆராய்ந்தால், உடல் என்பது மில்லியன், பில்லியன் எல்லாம் தாண்டி டிரில்லியன் கணக்கான செல்களால் உருவானது. இந்த செல்கள் தானாகவே உருவாவதும் வளர்வதும் வயதாவதும் பின்பு அழிவதுமாகவே நம் உடலின் இயக்கம் அமைந்துள்ளது. இந்த செல்களில் ஏதேனும் ஓர் இடத்தில் ஏற்படும் வழக்கத்துக்கு மாறான, அபரிமிதமான வளர்ச்சியே புற்றுநோய் (கேன்சர்)[1] எனப்படுகிறது. இந்தப் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக 40% சதவிகித புற்றுநோய்கள் தவறான பழக்கவழக்கங்களால் நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான். மது, புகையிலை, பாக்கு, பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால்தாம் அதிக அளவு புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. பாலியல் பழக்கங்களால் தொண்டைப் புற்றுநோய், ஆசன வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய் உண்டாகலாம். இவற்றைத் தடுக்க முடியும். மரபியல் காரணங்களால் மார்பகப் புற்றுநோய் உண்டாகும். சுற்றுச்சூழல் மாசு காரணமாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். சூரிய ஒளி காரணமாக சருமப் புற்றுநோய் உருவாகும். இவ்வகை மேற்கத்திய நாடுகளில்தாம் அதிகம். இத்துடன் ஒருவரின் தொழில்முறை சார்ந்தும் புற்றுநோய் ஏற்படலாம்.

 

உணவின் நச்சுத்தன்மை காரணமாகவும் புற்றுநோய் உண்டாகலாம். சிவப்பு இறைச்சி, அதிகம் வறுத்த உணவு, அதிக கலோரி கொண்ட உணவு, பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளால் இது உண்டாகக்கூடும். இயற்கையான காய்,கனிகளாலான உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் இந்தப் புற்றுநோயைத் தவிர்க்கலாம். பாரம்பரிய உணவுமுறையை பின்பற்றுவது, வீட்டில் சமைத்து சாப்பிடுவது, சமைக்கும் பொருட்களை கவனமாகப் பார்த்து வாங்குவது போன்றவையும் முக்கியம்.

 

அதிக எடை காரணமாக மார்பகப் புற்றுநோய், அதிக கதிர்வீச்சுக்கு ஆளாவது,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் HIV தொற்று நிலையிலும் புற்றுநோய் அபாயம் ஏற்படும். ரத்தப் பரிமாற்றம், போதைப் பொருள் அடிமைத்தனம் காரணமாகவும் புற்றுநோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு உண்டாகலாம்.

 

ரோபோட்டிக், லேபராஸ்கோபிக் அறுவைசிகிச்சை என புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் இப்போது வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இதன் மூலம் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். குணமடையும் வேகமும் விரைவாக இருக்கும்.

கண்டுபிடிப்பது எப்படி?

புற்றுநோயை திட வடிவம் (Solid), திரவ வடிவம் (Liquid) என இரண்டு விதமாக பிரிக்கலாம். திட வடிவ புற்றுநோய் என்பது நம் உடலின் உறுப்புகளான வாய், நுரையீரல், கர்ப்பப்பை போன்றவற்றில் இருந்து ஏற்படும். ரத்தம், எலும்பு மஜ்ஜை போன்றவற்றில் இருந்து உருவாகும்.

 

Dr.ஏ.என்.அஸ்வின் MBBS, MD (Radiotherapy)[2]
புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. புற்றுநோய் (கேன்சர்): https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/oncology/
  2. Dr.ஏ.என்.அஸ்வின் MBBS, MD (Radiotherapy): https://www.kauveryhospital.com/doctors/chennai/radiation-oncology/dr-a-n-aswin/

Source URL: https://kauveryhospital.com/blog/tamil-articles/cancer-promising-modern-treatments/