இரண்டு வாரத்துக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா?

இரண்டு வாரத்துக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா?
June 13 06:22 2024 by admin Print This Article

ஒரு கிருமியினால் (Mycobacterium tuberculosis) வரும் ஒரு தொற்றுதான் tuberculosis. தமிழில் காசநோய் என்று குறிப்பிடுகிறோம். சுருக்கமாக டிபி என்றும் சொல்கிறோம். இது ஒரு தொற்றுநோய். யாருக்கும் வரலாம்.

டிபி நோயானது ஒரு காசநோயாளி இருமும்போது அல்லது தும்மும்போது காற்றின் மூலம் மற்றவர்க்கு பரவும். மற்றபடி அந்த காசநோயாளியை மற்றவர் தொடுவதாலோ, அவரிடம் உணவை பகிர்ந்துகொள்வதாலோ காசநோய் பரவுவதில்லை. அதே நேரத்தில் எல்லோருக்குமே காசநோய் வந்துவிடும் என்றும் சொல்ல முடியாது. 100 பேர் இருக்கும் இடத்தில் 30 பேருக்கு காசநோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஆரோக்கியமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு கட்டுப்பாட்டில் இருக்கும்… நோயாக மாறாது. தொற்றுநோயை உருவாக்கியவர்களில் (30%) உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது காசநோய் உருவாகும் அபாயம் எதிர்காலத்தில் உள்ளது. நோய்த்தொற்று உள்ளவர்களில் சுமார் 5 முதல் 10 சதவிகிதத்தினருக்கு காசநோய் உருவாகும். நோய்த்தொற்றுக்குப் பிறகு முதல் இரண்டு ஆண்டுகளில் இந்த ஆபத்து அதிகமாக உள்ளது. அதாவது சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை, புகைப்பழக்கம் இருக்கிறது, சிறுநீரகத்தில் பிரச்னை, இதயப் பாதிப்பு, நுரையீரல் தொற்று, மன அழுத்தம், சாப்பிடுவதில் சிரமம் என ஏதேனும் ஒரு காரணத்தால் எதிர்ப்பு சக்தி குறையும்போது உள்ளுக்குள் கட்டுப்பாட்டில் இருந்த காசநோய்த் தொற்று வெளியில் தெரிய வரும்.

நுரையீரல், நிணநீர் கணுக்கள் (lymph nodes), வயிறு, மூளை, ப்ளூரா மற்றும் பெரிகார்டியம் (நுரையீரல் மற்றும் இதயத்தின் அடுக்கு), எலும்பு என உடலின் எந்த உறுப்பையும் காசநோய் பாதிக்கலாம். பெரும்பாலும் 80 சதவிகிதத்துக்கும் மேல் நுரையீரலை மட்டுமே தாக்குகிறது.

சளி, இருமல், சளியில் ரத்தம், உடல் எடை குறைவது, பசியின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மூலம் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டுள்ளது எனக் கணிக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும் எந்த இருமலையும் புறக்கணிக்கக் கூடாது. அது டிபியாக மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வேறு ஏதேனும் நோயும் ஏற்பட்டிருக்கலாம். காச நோய்த் தொற்று சாதாரணமானது என அலட்சியமாக இருக்க கூடாது. இதில் உயிர் ஆபத்து உண்டு. உதாரணத்துக்கு நுரையீரலில் இருக்கும் டிபியை சாதாரண இருமல், சளி என்று கண்டுகொள்ளாமல் விட்டால் நுரையீரலின் ரத்தக் குழாய்கள் அடைத்துக் கொண்டு ரத்த ரத்த வாந்தி எடுத்து உயிரிழக்க நேரிடும். அதே நேரத்தில் காசநோயில் இருக்கும் நல்ல அம்சம் என்னவென்றால் உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் 100 சதவிகிதம் குணமாகிவிடும்.

இரண்டு வாரத்துக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல், நெறி கட்டுதல், மூச்சு வாங்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் கொள்ள சென்று பரிசோதித்துக் வேண்டும். ரத்த பரிசோதனையின் மூலம் காசநோயினை கண்டுபிடிக்க முடியாது. சளி பரிசோதனை (Acid-Fast Bacilli க்கான ஸ்மியர் சோதனை), GeneXpert MTB PCR சோதனை போன்றவற்றின் மூலம் காசநோய் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம்.

டிபியினால் நெறி கட்டியிருந்தால் அந்த இடத்தில் சாம்பிள் எடுத்து கண்டுபிடிக்க வேண்டும். இதே போல் மற்ற உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு என்றால் அந்த இடத்தில சாம்பிள் எடுத்து பரிசோதிக்க (Acid-Fast Bacilliக்கான ஸ்மியர், வளர்ச்சி (culture), GeneXpert MTB PCR மற்றும் ஹிஸ்டோபோதாலஜி (histopathology) சோதனைகள் செய்ய வேண்டும். மற்றும் புற்றுநோய் பிற நோய்த்தொற்றுகள் காசநோயைப் பிரதிபலிக்கும் என்பதால் இது முக்கியமானது

இந்தியாவில் அதிக மக்கள் தொகை, சுகாதார விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாததன் காரணமாக 100 பேரில் 40 முதல் 70 பேருக்கு காசநோய்த் தொற்று ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. ஆனால், இது எதிர்ப்பு சக்தியின் காரணமாக நோயாக மாறாமல் கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது தொற்று (Infection) ஏற்பட்டுள்ளது. ஆனால், நோயாக மாறவில்லை. இது எதிர்காலத்தில் எதிர்ப்பு சக்தி குறையும்போது காசநோயாக மாறிவிடும். மொத்தத்தில் இந்தியாவில் 1000 பேரில் 4 பேருக்கு காசநோய் உள்ளது.

காசநோயினை வரும் முன்னர் தடுக்கும் BCG தடுப்பூசி என்று சிறுவயதில் எல்லோரும் போட்டிருப்போம். ஆனாலும் இது மட்டுமே போதுமனதில்லை. முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுவில் எச்சில் துப்புவது தவிர்க்கப்பட வேண்டும். இருமல் வழிமுறை (etiquette) மிக முக்கியம்.

சிகிச்சை காசநோய்க்கு ஊசி என்பதில் இல்லை. மாத்திரைகள்தாம் சிகிச்சை. இதற்கு அரசாங்கமே இலவசமாக மாத்திரைகள் தருகிறது. உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்காது. 6 மாதத்துக்கு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால் அது குணப்படுத்த கடினமான டிபியாக மாறிவிடும். அதனால் மேலும் சிக்கல் ஏற்படலாம். எனவே, எந்தக் காரணத்தை கொண்டும் மாத்திரைகளை மருத்துவர் அனுமதியின்றி நிறுத்தக் கூடாது என்பது முக்கியம்.

வீட்டில் ஒருவருக்கு டிபி ஏற்பட்டிருந்தால், மற்றவர்களுக்கும் தொற்று பரவியிருக்கிறதா என்று கண்டுபிடிக்க Skin test செய்யலாம். தொற்று உறுதியானால் அது நோயாக மாறாமல் இருக்க மாத்திரைகள் மூலமே சரு செய்யலாம் (Tuberculosis prevention therapy).

இந்தியாவில் காசநோய் ஒரு பெரிய உடல்நலப் சுமார் பிரச்சினையாகும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 22 லட்சம் நோயாளிகள் மற்றும் 220,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. சமீபத்தில், காசநோய் இல்லாத இந்தியா (2025) பிரசாரத்தை அரசாங்கம் விழிப்புணர்வைப் தொடங்கியது. பரப்புவதன் மூலம் இந்த நோயை அகற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.