பருமன் முதல் கோவிட் வரை – இதயம் காக்கும் இந்தியா!

by admin | April 25, 2023 4:59 am

கோவிட்டும் இதயமும்

மனிதகுலத்துக்கு மகா கேடு விளைவித்த கோவிட், மருத்துவர்களுக்கு மாபெரும் சவாலாகவே திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தீவிரமான இதய நோய்கள் அளவிலும் அதிகமாக இருந்தன.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயப் பிரச்சினைகள் அவர்களின் குணமடைதலை சிக்கலாக்கியதை அறிவோம். அதேபோல ஏற்கெனவே இதயப் பிரச்சினைகளோடு இருப்பவர்களுக்கும் கோவிட் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தியது.

கோவிட்-19 முதன்மையாக சுவாச அல்லது நுரையீரல் நோயாக இருந்தாலும், சிலருக்கு இதயமும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக இதயத் திசுக்களுக்கு தற்காலிக அல்லது நீடித்த சேதம் ஏற்பட்டிருப்பதையும் கண்டோம்.

கொரோனா வைரஸ் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் வீக்கம் மற்றும் திரவத்தை நிரப்புவதால், குறைந்த அளவு ஆக்ஸிஜனே ரத்த ஓட்டத்தை அடையும். இதனால் ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக உழைக்க வேண்டும். இது ஏற்கனவே இதய பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஆபத்தானது.

அதிக பளு காரணமாக இதயம் செயலிழக்க நேரிடலாம். அல்லது ஆக்சிஜன் செல் இறப்பு மற்றும் இதயம் மற்றும் பிற உறுப்புகளில் திசு சேதம் ஏற்படலாம். மயோர்கார்டிடிஸ் என்ற இதய வீக்கம் ஏற்படலாம். கொரோனா வைரஸ் இதயத்தின் தசை திசுக்களை நேரடியாகப் பாதித்தும் சேதப்படுத்தலாம்.

கொரோனா வைரஸ் தொற்று, நரம்புகள் மற்றும் தமனிகளின் உள் மற்றும் மேற்பரப்புகளையும் பாதிக்கிறது. இது ரத்த நாள அழற்சியை விளைவிக்கும். இதனால் இதயம் அல்லது உடலின் பிற பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது சிரமமாகலாம்.

வைரஸ் தொற்றுகள் கார்டியோமயோபதியை[1] ஏற்படுத்தும். இது இதய தசைக் கோளாறாகும். அதனால் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்யும் இதயத்தின் திறன் பாதிக்கப்படும். ஒரு வைரஸால் தாக்கப்படும்போது, உடலும் மனமும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. அதோடு, அப்போது கேடகோலமைன்கள் எனப்படும் ரசாயனங்கள் வெளிப்படுகின்றன. இவையெல்லாம் இதயத்தை திகைக்க வைக்கும். ஒரு நல்ல விஷயம்… நோய்த்தொற்று சரியாகிவிட்டால், மன அழுத்தம் குறைந்து இதயம் சீராகிவிடும்.

கோவிட் தொற்று நீங்கிய பல மாதங்களுக்குப் பிறகும், மாரடைப்பு போன்ற இதய பிரச்சினைகளின் ஆபத்து அதிகமாக இருந்தன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2020-ம் ஆண்டில் கடுமையான கோவிட் நோய்த்தொற்றுகளுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, அடுத்த ஆண்டில் இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தது. கோவிட் பாதிப்பு ஏற்படாதவர்களோடு ஒப்பிடும்போது இதய நோய் ஆபத்து இவர்களுக்கு 20 மடங்கு வரை அதிகரித்தது.

மன அழுத்தம்

உடல் செயல்பாடுகள் குறைவதும், மன அழுத்தம் அதிகரிப்பதும் இதய நோய்களுக்கு முக்கியமான காரணமாக விளங்குகின்றன. ஓரளவு மன அழுத்தம் இருப்பது நல்லதுதான். ஆனால், மன அழுத்தம் அளவுக்கு மீறும்போது பெரிய அளவில் பாதிக்கப்படுவது இதயம்தான்.

நீரிழிவு

நீரிழிவு கட்டுப்பாடு இல்லையென்றால் இதயம் மட்டுமல்ல… மூளை, நுரையீரல், சிறுநீரகம் என உடலின் பல உறுப்புகள் ஒரு ‘டோமினோ எஃபெக்ட்’ போல பாதிக்கப்படும் அபாயம் அதிகம். இதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது மிக அவசியம். வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்கள் செய்து கொண்டு, மருத்துவ ஆலோசனை பெற்றால் நீரிழிவின் தாக்கத்திலிருந்து இதயத்தைக் காப்பாற்றுவது எளிதே!

உலக நாடுகளின் இதய நிலை பொருளாதார வசதி படைத்த, சுகாதார வசதிகள் கொண்ட நாடுகள், சுகாதார வசதி மிகவும் குறைவாக உள்ள பொருளாதார வசதியற்ற நாடுகள், இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தர நாடுகள் என மூன்று வகையான நாடுகள் உள்ளன. இங்கிலாந்து போன்ற வசதியான நாடுகள் முதல் பட்டியலில் வருகின்றன. பல ஆப்பிரிக்க நாடுகள் சுகாதார வசதியற்ற நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் நடுத்தரப் பட்டியலில் உள்ளன.

எனினும், உலகின் வளர்ச்சியடைந்த பல நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் மருத்துவ வசதிகள் மிகச் சிறப்பானவை. தொழில்நுட்பங்களும் மிக நவீனமானவை. மிகத் தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இங்கிருக்கிறார்கள். சென்னையில் பெறக்கூடிய அதே இதய சிகிச்சை வசதிகளை[2] திருச்சியிலும் திருநெல்வேலியிலும் ஓசூரிலும் கூட நாம் பெற முடியும். காவேரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைகளே இதற்கு உதாரணம்.

அதே போல, உலகின் பல நாடுகளில் ஒப்பிடும்போது நம் மருத்துவ சேவைக் கட்டணங்கள் மிகக் குறைவு. குறிப்பாக இதய நோய்களுக்கான சிகிச்சையில் நாம் முன்னோடியாக சாதனைகள் பல படைத்து வருகிறோம். லண்டன், நியூயார்க், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் அதிக செலவில் கிடைக்கக்கூடிய இதய நோய்க்கான நவீன சிகிச்சையை நாம் மலிவாக வழங்கி வருவது மிகச்சிறப்பு. இப்போது இந்தியாவிலேயே ஸ்கேன் கருவிகள், பேஸ்மேக்கர்[3] உட்பட அதிநவீன மருத்துவ சாதனங்களைத் தயாரிக்கிறோம் என்பதும் பெருமையான விஷயமே.

தொடர்புடைய வலைப்பதிவு: இதயம் காக்க இணைவோம் இன்றே[4]

இதயம் காக்க என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் வெங்கிடா சுரேஷ்
MBBS., MD (Internal Medicine), PGD (Cardiology)
குழும மருத்துவ இயக்குனர், காவேரி மருத்துவமனை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. கார்டியோமயோபதியை: https://kauveryhospital.com/blog/heart-health/prevention-and-treatment-of-cardiomyopathy/
  2. இதய சிகிச்சை வசதிகளை: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/cardiology-services
  3. பேஸ்மேக்கர்: https://www.youtube.com/watch?v=sCNItbYamps
  4. இதயம் காக்க இணைவோம் இன்றே: https://kauveryhospital.com/blog/tamil-articles/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/

Source URL: https://kauveryhospital.com/blog/tamil-articles/ways-to-protect-your-heart/