Categories: Tamil Articles

மெனோபாஸுக்கு பிறகான ரத்தப்போக்கு… ஆபத்தானதா?

மெனோபாஸ் என்பது என்ன?எப்படி உறுதி செய்துகொள்வது?

 பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் கால கட்டமாக 45 முதல் 55 வரையிலான வயதைக் கூறுகின்றனர். அவ்வாறு நிரந்தரமாக நிற்கும் பீரியட்ஸ் மெனோபாஸ் என அழைக்கபடுகிறது.அப்போது  சினைப்பையிலிருந்து உருவாகும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதோடு, கருமுட்டை வெளியாவதும் முடிவுக்கு வருகிறது. 50 வயதுக்கு மேல் ஒரு வருடத்துக்கு, அதாவது தொடர்ந்து 12 மாதங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் அதை பீரியட்ஸ் நிரந்தரமாக நின்றுபோகும் மெனோபாஸ் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் ரத்தக்கசிவு சாதாரணமானதா?

மெனோபாஸ்க்கு பிறகு,  ரத்தப்போக்கே இருக்கக்கூடாது. சிறிதளவு ரத்தப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மெனோபாஸ்க்கு பிறகு ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு கரணங்கள் என்ன?

மெனோபாஸ்க்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்ணுறுப்பு திசு மெலிந்து போதல் அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்படுதல், கர்ப்பப்பை திசு தடித்தல் அல்லது கட்டிகள் உருவாதல், கர்ப்பப்பை (எண்டோமெட்ரியல்) புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய், சினைப்பை புற்று நோய் ஆகியவற்றால் ரத்தப்போக்கு ஏற்படலாம்

இந்தச் சூழ்நிலையில் எந்த மாதிரியான பரிசோதனைகள் செய்யப்படவேண்டும்?

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம் கர்ப்பப்பை தடிப்பு மற்றும் கட்டிகளை கண்டறியலாம். மேலும், பெண்ணுறுப்பு பரிசோதனையின் மூலம் மற்ற பிரச்சினைகளை கண்டறியலாம். தேவைப்படின் திசு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இதற்கு என்ன வகையான சிகிச்சை முறைகள் உள்ளன?

சிகிச்சை முறையானது சாதாரண பிரச்சினை அல்லது புற்று நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதைப் பொறுத்து மாறுபடும். சாதாரண பிரச்சினைகளுக்கு சில மருந்துகள், வாழ்வியல் மாற்றங்கள், ஹைஸ்டெரோஸ்கோபிக் (Hysteroscopic) சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

புற்று நோய் கண்டறியப்படின், அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

திசு பரிசோதனையின் மூலம், புற்று நோய் ஏற்படுவதற்கு முந்தைய நிலை அல்லது புற்று நோய் என்பது உறுதி செய்யப்படும். பிறகு சில பரிசோதனைகள் (MRI அல்லது PET Scan) மூலம் நோயின் நிலை (stage) கண்டறியப்படும். நோயின் நிலையைப் பொறுத்து கர்ப்பப்பை மற்றும் சினைப்பை மற்றும் நெறிக்கட்டிகள் அகற்றப்படும்.

தற்போது அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சையினை முற்றிலுமாக லேப்ரோஸ்கோபி அல்லது ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் செய்யமுடியும். மேலும் Indocyanine green fluorescent dye  அனைத்து நெறிக்கட்டிகளையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட நெறிக்கட்டிகளை மட்டும் துல்லியமாக அகற்ற முடியும். இந்த சிகிச்சைகள் சிறுதுளைகள் மூலமாகவே செய்யப்படுவதால் விரைவில் குணமடைந்து வீடு திரும்பலாம்.

புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டும் போதுமானதா? அல்லது வேறு என்ன சிகிச்சைகள் தேவைப்படுமா?

ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் பட்சத்தில், அறுவை சிகிச்சை மட்டும் போதுமானது. சிறிது நோய் அதிகமான நிலையில் கண்டறியப்படும் பட்சத்தில் கதிரியக்க சிகிச்சை அல்லது கீமோதெரபி அல்லது இரண்டும் தேவைப்படும். தற்போது உள்ள அதிநவீன சிகிச்சை முறைகள் மூலம், குறைந்த பக்க விளைவுகளுடன் முழு குணம் பெறலாம்.

புற்று நோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியதா?

ஆம். ஸ்டேஜ் 1 முதல் 3 வரை (ஆரம்ப நிலை முதல் அருகில் உள்ள உறுப்புகளுக்கு மட்டும் பரவியுள்ள நிலை) இருக்கும்பட்சத்தில் புற்று நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தலாம். தொலைவில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு பரவியுள்ள முற்றிய நான்காவது நிலையிலும்கூட தற்போது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வாழ்நாளை நீட்டிக்க முடியும்.

புற்று நோய்க்கு பிறகு, சிகிச்சையை முடித்து கருத்தரிக்க இயலுமா?

வீரியம் குறைந்த ஆரம்ப நிலை நோய்களுக்கு மட்டும் இது சாத்தியமானதாகும். இத்தகைய சூழ்நிலையில், ஹார்மோனை வெளியிடக்கூடிய கருவிகள் கர்ப்பப்பைக்குள் பொருத்தப்பட்டு, நோய் குணப்படுத்தப்படும். இதன் மூலம் கர்ப்பப்பை பாதுகாக்கப்பட்டு, கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

கர்ப்பபை புற்று நோய் உருவாவதை தடுப்பது எப்படி?

அதிகக் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்தல்,உடல் சிகிச்சை பருமனைத் தவிர்த்தல், ஹார்மோன் எடுத்துக்கொள்ள நேரிடின் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ளுதல், கூடவே தினமும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவற்றின் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Recent Posts

இது இதயத்துக்கு இதமான சிகிச்சை!

TAVI என்பது டிரான்ஸ்கேதெட்டர் பெருநாடி வால்வு இம்ப்லாண்டேஷன் (Transcatheter Aortic Valve Implantation) என்பதைக் குறிக்கிறது. இது சேதமடைந்த பெருநாடி…

2 hours ago

தடைகளை உடைக்கும் தரமான சிகிச்சை!

ரோபோடிக் அறுவை சிகிச்சை... இது பல தடைகளை உடைத்து, உடலின் பல்வேறு பாகங்களைப் பாதிக்கும் நோய்கள் மற்றும் நிலைமைகளின் பரவலான…

3 hours ago

ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்!

தாய்மைப் பயணம் என்பது தனித்துவமிக்க மறக்க முடியாத அனுபவமாகும். தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்பின் முக்கியமான அம்சங்களை அறிவதன் மூலமே…

3 hours ago

பார்கின்சன் பாதித்தாலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்!

பார்கின்சன் நோய் என்றால் என்ன? பார்கின்சன் நோய் என்பது இரண்டாவது பொதுவான நரம்பியக்கடத்தல் கோளாறு மற்றும் மிகவும் பொதுவான இயக்கக்…

1 day ago

நீரிழிவாளர்களுக்கு உதவும் HbA1c சோதனை

ஹீமோகுளோபின் A1c (HbA1c) சோதனை என்பது கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் சராசரி ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை…

1 day ago

மாரடைப்பு ஏற்பட்டால்..?

மாரடைப்பு என்றால் என்ன? மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும். இது உங்கள் இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த…

2 days ago