நம் ரத்தத்திலிருந்து யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியே அகற்றும் பணிகளை இரு சிறுநீரகங்கள் செய்கின்றன. இயல்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த அத்தியாவசிய வேலையானது சிறுநீரகம் பழுதடைந்திருக்கும்போது தடைபடும். இந்த இக்கட்டான நேரத்தில் அந்தப் பணியை செயற்கையான மருத்துவ முறையில் செய்யும் முறைக்கு பெயர்தான் டயாலிசிஸ் (Dialysis).
டயாலிசிஸ் செய்யப்படும் சூழ்நிலை நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தும் மாறும். ரத்தத்தில் யூரியாவின் அளவு 200க்கும் மேல் சென்றாலோ, க்ரியாட்டினின் அளவு 5 அல்லது 6க்கு மேல் சென்றாலோ பொட்டாசியம் அளவு 6க்கு மேல் சென்றாலோ, அமிலத்தன்மை அதிகரித்தாலோ, சிறுநீர் வெளியேறவில்லை என்றாலோ, உடலில் சிறுநீர் கோத்துக் கொண்டாலோ டயாலிசிஸ் செயல்முறை தேவை.
இரண்டு விதமான சிறுநீரக பிரச்சினைகள் இருக்கின்றன. முதல் வகை, நீண்ட காலமாக இருக்கிற நீரிழிவு, ரத்த அழுத்தம் (Chronic diseases) உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுநீரகம் இனி சரியாகாது என்கிற நிலையை அடைந்திருக்கும். இதனால் சிறுநீரகம் படிப்படியாக தன்னுடைய செயல்திறனை இழந்திருக்கும். இந்த நேரத்தில் சிறுநீரகத்தின் வேலையை வெளியில் இருந்து செயற்கையாக (டயாலிசிஸ் இயந்திரம்) செய்ய வேண்டும். அப்படியில்லாவிடடால்
சிறுநீரக மாற்று சிகிச்சை (Kidney transplantation) மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு தற்காலிகமாக ஏதேனும் பிரச்னை காரணமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். இதை Acute kidney failure என்போம். இவர்களுக்கும் தற்காலிகமாக சில தினங்களுக்கு மட்டும் டயாலிசிஸ் தேவை. இதற்கிடையில் சிறுநீரகம் செயல் இழந்திருக்கும் காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். சிறுநீரகம் தனது பணியை மீண்டும் செய்ய தொடங்கும்போது நிறுத்திவிடலாம்.
ஒன்று ரத்தம் சம்பந்தப்பட்ட ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis). சிறுநீரக நோயாளி மருத்துவமனைக்கு வாரம் இரண்டு, மூன்று முறை வந்து ரத்தத்தை சுத்தம் செய்துகொண்டு வீட்டுக்கு சென்றுவிடலாம்.
இரண்டாவது பெரிட்டோனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis). இந்த சிகிச்சையை மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நோயாளியின் வீட்டிலேயே செய்யலாம்.
இது மருத்துவமனையையும் டயாலிசிஸ் மையத்தையும் பொறுத்தது மாறுபடும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் செய்யலாம். இருப்பினும் ரூபாய் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவாகக்கூடும்.
Chronic disease என்கிற நிலையை அடைந்துவிட்ட நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு கொண்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.
ஆரம்ப காலங்களில் டயாலிசிஸ் சிகிசிச்சையின் வெற்றி விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது. அப்போது டயாலிசிஸ் செய்த பிறகு நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தது. இப்போது டயாலிசிஸ் சிகிச்சை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. காவேரி மருத்துவமனையில் ஒரு நோயாளி 17 ஆண்டுகளுக்கும் மேல் டயாலிசிஸ் செய்துகொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இந்திய அளவில் 30, 40 ஆண்டுகள் வரை டயாலிசிஸ் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Summary Mitral Valve is an important valve in the human heart and like any other…
Table of Content Introduction What are Ventricular Assist Devices Why are they required? Types of…
Table of Content Introduction Types Causes Triggers Symptoms Diagnosis Treatment Summary Thunderclap headaches are a…
Summary Hypertension in children is on the rise. It is usually caused due to kidney…
Summary Hemoptysis is a condition in which the person coughs up blood in small to…
Table of Content Snake Bites – Everything you need to know in a nutshell What…