Categories: Tamil Articles

குழந்தைகளின் மூக்கில் ரத்தம் வருவது ஏன்?

பெற்றோர்கள் பெரும் பதற்றத்துடன் அவசர அவசரமாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள். விசாரித்தால், ’திடீரென குழந்தைக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்துருச்சு’ என்பார்கள். எதனால் மூக்கில் ரத்தம் வருகிறது? அதை எவ்வாறு தவிர்க்கலாம்?

பொதுவாக குழந்தைகளின் விரல் நகங்கள் பட்டு, அதன் மூலம் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருவது பொதுவான ஒரு காரணம். இரண்டாவதாக மூக்கில் சளி, சைனஸ் நோய்த்தொற்று ஏதேனும் இருந்தால் சளியோடு கலந்து ரத்தம் வர வாய்ப்பிருக்கிறது. சில குழந்தைகளுக்கு ரத்தம் உறையும் தன்மை – அதாவது ரத்தப்போக்கு கோளாறு(bleeding disorders) இருக்கும். அந்தக் குழந்தைகளுக்கு அடிக்கடி இப்படி நடக்கலாம். இவை மூன்றும் பொதுவான தொந்தரவுகள். பெரும்பாலும் நான் பார்க்கக்கூடியது மூக்கில் கை வைத்து காயமாகி அதன் மூலம் ரத்தம் வந்திருக்கக்கூடிய குழந்தைகளே.

எவ்வாறு தெரிந்து கொள்வது?

ரத்தம் தொடர்ந்து 2 நிமிடங்கள் வரும். அந்த நேரத்தில் வலி ஏதும் இருக்காது. படுத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று பார்த்தால் தலையணையில் ரத்தமாக இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் குழந்தையை உட்கார வைத்துவிட வேண்டும். அதாவது தலையை தாழ்த்திக் கொண்டாலே போதுமானது. பொதுவாக முன்புறம் இருந்து ரத்தம் வரும். ஆகையால் இவ்வாறு செய்யும்போது ரத்தப்போக்கு நின்றுவிடும்.

சில பெற்றோர், ’குழந்தையின் மூக்கைப் பிடித்துக்கொண்டு படுக்க வைக்கலாமா?’ என்று கேட்பார்கள். அவ்வாறு செய்வது நல்லதல்ல. காரணம், அப்போது ரத்தம் தொண்டைக்கு போகக்கூடும், பிறகு அதை வாய் வழியாகத் துப்ப ஆரம்பிப்பார்கள். அதைப் பார்க்கும்போது பெற்றோருக்கு ஒருவகையான பதற்றம் ஏற்படும். ஆகையால், குழந்தையை உட்கார வைத்து, தலையை தாழ்த்திக் கொண்டாலே இரண்டு நிமிடங்களில் ரத்தம் நின்றுவிடும். பிறகு காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அவசியம் சென்று பார்த்து, இது எதனால் வருகிறது, எப்படித் தவிர்க்கலாம் என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலுதவியாக நாம் குழந்தையை உட்கார வைத்து தலையைத் தாழ்த்திக் கொள்ளச் செய்கிறோம். பிறகு எந்த இடத்தில் தொந்தரவு இருக்கிறது, மூக்கில் ரத்தக் குழாய் வீங்கி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அதற்கான சிகிச்சையை கொடுக்கலாம்.   குழந்தைகளின் விரல் நகங்களைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இப்பிரச்னையை தடுக்கலாம். இப்படியெல்லாம் செய்தும், மாதம் ஒரிருமுறை ரத்தம் வருகிறது என்றால், காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து வேறு ஏதாவது தொந்தரவினால் இவ்வாறு நடக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். தேவையெனில் மூக்கின் உள்ளே ஸ்கோபி செலுத்திப் பார்ப்பார்கள். உள்ளே ஏதேனும் வீக்கம், நோய்த்தொற்று இருக்கிறதா என்று கண்டறிந்து, அதனை சரி செய்துவிடலாம்.

பொதுவாக Nose picking தவிர்த்தாலே, 80-90% குழந்தைகளுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவது நின்றுவிடும்.


Highlight : குழந்தையை உட்கார வைத்து, தலையை தாழ்த்திக் கொண்டாலே இரண்டு நிமிடங்களில் ரத்தம் நின்றுவிடும்.


Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Recent Posts

Dos and Don’ts for Snake Bites – FAQs

Table of Content Snake Bites – Everything you need to know in a nutshell What…

13 hours ago

நீரிழிவும் சிறுநீரகமும்

சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாடுகள் என்னென்ன? உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் முதுகின் நடுவில், உங்கள் விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளன.சிறுநீரகத்தின்…

5 days ago

முறையான சிகிச்சை… முழுமையான விடுதலை!

சில நோய்களின் பெயர்களைக் கேட்கும்போதே கொஞ்சம் அச்சம் வரும். அப்படிப் பயமுறுத்தும் பட்டியலில் காசநோயும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஆனால், அத்தகைய…

5 days ago

தூக்கக் கோளாறுகளும் நுரையீரல் கோளாறுகளும்

நாள்பட்ட நுரையீரல் கோளாறுகள் அடிக்கடி தூக்கம் தொடர்பான அசாதாரணங்களுடன் தொடர்புடையவை. இதுபோன்ற இணை நோய்கள் இந்த நோயாளிகளின் மோசமான வாழ்க்கைத்…

5 days ago

மூன்று முக்கியமான ‘உ’

உணவு, உடற்பயிற்சி, உறக்கம்...  இவை மூன்றும் ஒரு பெண்ணின் அனைத்துப் பருவங்களிலும் முக்கியமான பங்கு வசிக்கின்றன. இந்தப் பட்டியலில் மற்றும்…

5 days ago

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

புற்றுநோய் என்பது என்ன? மனித உடலின் முக்கிய அங்கமான செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிதான் புற்றுநோய். பொதுவாக அபரிமிதமாக வளர்ச்சியடையும்…

6 days ago