மனித ஆரோக்கியத்தில் மாசு!

மனித ஆரோக்கியத்தில் மாசு!
December 13 05:34 2023 by admin Print This Article

மனித ஆரோக்கியத்தில் மாசு பாட்டின் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி முதல் நுரையீரல் புற்றுநோய் வரை, காற்று மாசுபாடு நோய் அபாயத்தை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

காற்று மாசுபாடு மற்றும் சுவாச அமைப்பு… இவை இரண்டுக்குமான தொடர்பு மிகவும் வெளிப்படையானது. இருப்பினும், காற்று மாசுபாடு ரத்த ஓட்ட அமைப்பு மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்.

மனித ஆரோக்கியத்தில் மாசு!

வளிமண்டலத்திலுள்ள துகள்களால் மனித ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்தத் துகள்கள் சுவாச எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மூக்கில் நீர் வடிதல் ஏற்படலாம்.

காற்று மாசுபாடு நுரையீரல் பாதிப்பு மற்றும் குறைந்த நுரையீரல் செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. காற்று மாசுபாடு இதயத்தில் ஓர் அழற்சி விளைவையும் ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை உயர்த்தும். இதயத்தின் ஏற்கனவே இருக்கும் நிலைமைகளை மோசமாக்கும்.

மாசுபட்ட காற்றை நீண்டகாலம் சுவாசிப்பது இறப்பு ஆபத்தைக் கணிசமாக அதிகரிக்கிறது. உதாரணமாக, இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

மாசுபாட்டுக்கான பெரும்பாலான காரணங்கள் பெரும்பாலும் மனிதர்களாலேயே உருவாக்கப்படுகின்றன. ஆம்… மாசுபாடுகள் ஏற்படுவதற்கு மனிதர்களே காரணமாக இருக்கிறார்கள். உதாரணமாக… நீர் மாசுபாடு நீர்நிலையில் வாழும் தண்ணீருடன் தொடர்புகொள்ளும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மனிதர்களுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்தும்.

காற்று மாசுபாடு

நிலக்கரி அல்லது எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்களை நாம் எரிக்கும்போது, கார்பன் மோனாக்சைடு காற்றில் வெளியாகி நாம் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்துகிறது. நச்சுக் காற்றை உள்ளிழுக்கும்போது, அது ஆக்ஸிஜனை பம்ப் செய்யும் நமது இதயத்தின் திறனை மோசமாக்குகிறது; பல்வேறு சுவாச நோய்களுக்கு வழிவகுக்கிறது.

தொழில்துறை உமிழ்வு

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்து வதற்கான அரசாங்க விதிமுறைகளை தொழில்துறை பின்பற்றாதபோது, பலவித மாசுக்கள் காற்றில் வெளியிடப் படுகின்றன. நைட்ரஜன் ஆக்சைடு முதல் கார்பன் மோனாக்சைடு வரை, இந்த வாயுக்கள் மனித ஆரோக்கியத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும். கண்கள், தொண்டை, சுவாசக் குழாய் மற்றும் பல உடல் பகுதிகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.

தொடர்புடைய வலைப்பதிவு: மாசில்லா பூமி வேண்டும்

காட்டுத்தீ  

காலநிலை மாற்றத்தால் காட்டுத் தீ ஏற்படுகிறது, இது புகை மூட்டத்தை ஏற்படுத்துகிறது. காடுகளை எரிக்கிறது மற்றும் சேதத்தை ஏற்படுத்து கிறது. இது சுவாசம், தொண்டை மற்றும் பலவற்றில் சிரமத்துக்கு வழிவகுக்கிறது.

குப்பை எரித்தல்

இன்றும் கூட, குப்பைகளை திறந்த வெளியில் எரிப்பது முக்கிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், தினமும் சுமார் 9500 டன் கழிவுகள் உருவாகின்றன; எரிக்கப்படுகின்றன.

இது கல்லீரல் பிரச்சினைகள், இனப்பெருக்கச் செயல்பாடுகளில் சிக்கல்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் சிக்கல்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

ரசாயனங்களும் வாகனங்களும்

ரசாயனம்  உட்செலுத்தப்பட்ட பொருட்களின் பயன்பாடு மற்றும் வாகன மாசுபாடு காற்றில் தீங்கு விளைவிக்கும் மாசுக்களை வெளியிடுவதற்கு வழி வகுக்கும். வாகன மாசுபாடு அதிகமாகும் போது, அது ஓசோன் படலத்தில் ஒரு துளையை உருவாக்கலாம். அது புகை மூட்டம் மற்றும் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

நீர் மாசுபாடு

நீர் பல பொருட்களைக் கரைக்கும் திறன் கொண்டது. எனவே இது உலகளாவிய கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது. மாசுபாடு எளிதில் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். பலர் தங்கள் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் விடுகின்றனர். மேலும், வீடுகளில் செப்டிக் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை இறுதியில் மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீரை மாசுபடுத்தும்.

மனித-ஆரோக்கியத்தில்-மாசு

தொழில்துறைக் கழிவுகள் சில 

தொழிற்சாலைகள் தங்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நேரடியாக ஆறுகள் போன்ற நீர்நிலை களில் விடுகின்றன. மேலும், பல்வேறு தொழில்களில் தண்ணீர் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. இதனாலும் மாசு ஏற்படுகிறது. அதிகரித்த நீர் வெப்பநிலை ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கும். இது மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும்.

யூட்ரோஃபிகேஷன்

நீர்நிலைகளில் அதிக அளவு வேதிச் சத்துக்கள் புகும்போது யூட்ரோஃபிகேஷன் ஏற்படுகிறது. இது ஆல்காவின் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் தண்ணீருக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், மீன்கள் சுவாசிக்க முடியாமல் போகும். மேலும், இந்த நிகழ்வு ஆபத்தான நச்சுகளை நீர்நிலைக்குள் அறிமுகப் படுத்தலாம், இது மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குப்பைகளை திறந்தவெளியில் எரிப்பது கல்லீரல் பிரச்சினைகள், இனப்பெருக்கச் செயல்பாடு மற்றும்  நோயெதிர்ப்பு மண்டலத்தில் சிக்கல்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

காடழிப்பு 

காடுகளை அழிப்பதால் மண் அரிப்பு ஏற்படும். இந்தத் தளர்வான மண் துகள்கள் நீர்நிலைக்குள் நுழையும் போது, அவை தண்ணீரின் இயல்பை மாற்றும். இது நீர்வாழ் உயிரினங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது (மணல் துகள்கள் செவில்களில் சிக்குவது போல).

விவசாய ரசாயனங்கள் 

உரங்கள் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பிற ரசாயனங்கள் தண்ணீரை நச்சுத்தன்மையாக்குகின்றன. மேலும், இந்த உரங்களில் சில யூட்ரோஃபிகேஷனைத் தூண்டும்.

விபத்துகள்

சூழல் விபத்துகள் என்பது கசிவு மற்றும் எண்ணெய் கசிவு போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது. குறிப்பாக எண்ணெய்க் கசிவுகள் சுற்றுச்சூழலுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் மிகவும் கேடு விளைவிக்கின்றன. பெரிய எண்ணெய் டேங்கர்கள், பாறைகளில் துளையிடும் கருவிகள் விபத்துக்கு உள்ளாகும்போது இது நிகழ்கிறது.

ஒலி மாசுபாடு

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒலி மாசு, தொழில்மயமாக்கல், மோசமான நகர்ப்புறத் திட்டமிடல், போக்குவரத்து மற்றும் பல ஒலிகள் மாசுபாட்டுக்கு வழிவகுக்கின்றன. மனித காதுகளுக்கு சிறிய சத்தம் சரியாக இருந்தாலும், சத்தம் 30-140 டெசிபல் வரை செல்லும் போது அது மனிதர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். தலைவலி, பார்வைக் கோளாறுகள் முதல் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.