மாசில்லா பூமி வேண்டும் – இந்தியர்களை அச்சுறுத்தும் நுரையீரல் அடைப்பு!

மாசில்லா பூமி வேண்டும் – இந்தியர்களை அச்சுறுத்தும் நுரையீரல் அடைப்பு!
April 19 06:16 2023 by admin Print This Article

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் 

நமக்குத் தெரிந்ததுதான்…

உயிர் வாழ நீரையும் ஆகாரத்தையும் காட்டிலும் அத்தியாவசியமானது மூச்சுக்காற்று என்பதும், அந்த மகத்தான பணியை செய்வது நுரையீரல் என்பதும் நமக்கு தெரிந்ததுதான். ஆனால், தெரியாத ஒரு தகவலும் இதில் உண்டு… ஒவ்வோர் ஆண்டும் சுமார் பத்து லட்சம் இந்தியர்கள் நுரையீரலில் ஏற்படும் அடைப்பு காரணமாக தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். மருத்துவ புள்ளிவிபரங்களின்படி இந்தியர்களை அதிகம் பலி வாங்குகிற இரண்டாவது பெரிய ஆபத்தாக நுரையீரல் அடைப்பு உள்ளது. இந்த உயிர்க்கொல்லி பட்டியலில் இதய நோய் முதல் இடத்தில் உள்ளது என்பது உப தகவல்.

சரி… நுரையீரல் அடைத்துக் கொள்வது ஏன்? யாருக்கெல்லாம் இந்த பிரச்னை ஏற்படலாம்?

நுரையீரலில் ஏற்படும் அடைப்பை Chronic Obstructive Pulmonary Disease or Emphysema or Chronic bronchitis என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். COPD என்று சுருக்கமாகச் சொல்வோம். தமிழில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று மொழிபெயர்க்கலாம்.

ஏன் கவனிக்க வேண்டும்? 

இன்று இந்தியாவில் வெகு சாதாரணமாக காணக் கூடிய நுரையீரல் பிரச்னையாக COPD உருவெடுத்துள்ளது. இந்திய ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 3.5 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நுரையீரல் அடைப்பு பாதிப்பில் அவசர கவனம் தேவைப்படுகிறது.

நுரையீரல் அடைப்புக்கான காரணங்கள்?

புகைப் பழக்கம், தன்முனைப்பற்ற புகைத்தல் (Passive Smoking), மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகடுப்பு போன்றவற்றால் வீட்டினுள் ஏற்படும் காற்று மாசு, வெளிப்புற காற்று மாசு, கட்டுப்பாட்டில் வைக்காத ஆஸ்துமா, காச நோய் மற்றும் நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் தொழில் சார்ந்த காரணங்களால் நுரையீரல் அடைப்பு ஏற்படலாம்.

தவிர்ப்பது எப்படி?

COPD பிரச்சினையில் இருக்கும் மிக நல்ல விஷயம், இது வரும் முன்னர் தடுக்கக் கூடியது என்பதும், வந்த பிறகு சிகிச்சையளிக்கக் கூடியதுமான நோய் என்பதும்தான்!

புகைப்பழக்கமே COPD பிரச்னையை உண்டாக்குவதில் மிகப்பெரும் காரணியாக உள்ளது. சராசரியாக உலகில் 85 சதவிகித COPD நோய்க்கு புகைப்பழக்கமே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக உள்ளது. புகைப் பிடிப்பவரின் அருகில் இருப்பவரையும் பாதிக்கும் என்பதால், எப்போதும் புகையிடமிருந்து எப்போதும் தள்ளியே இருங்கள்.

தினமும் 10 சிகரெட் என்கிற அளவில் ஓராண்டு காலமோ, தினமும் 1 சிகரெட் என்கிற அளவில் பத்தாண்டு காலமோ புகைப்பிடித்தால் COPD பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

புகைப்பழக்கத்துடன் காற்று மாசுவும் COPDயை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. பெரும்பாலான COPD நோயாளிகள் புகைப்பழக்கம் இல்லாதவர்களாகவும் உள்ளனர். சமீபகாலமாக உள்புற காற்று மாசு (Indoor air pollution) காரணமாகவும், வெளிப்புற காற்று மாசு காரணமாகவும் அதிகமானோர் COPDக்கு அதிக நோயாளிகள் ஆளாகின்றனர். உள்புற காற்று மாசு என்பதில் சமையலுக்காக பயன்படும் எரிபொருட்களும் காரணமாகின்றன. தொழில்முறை (Occupational) சார்ந்த காரணங்களாலும் இப்பிரச்சினை உண்டாகிறது. எனவே, இரண்டாவது காரணியான காற்று மாசு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. இத்துடன் கட்டுப்படுத்தப்படாத, நாள்பட்ட ஆஸ்துமாவும் இந்த நோயை உண்டாக்குகிறது. முறையான சிகிச்சை எடுத்துக்கொண்ட காச நோயாளிகளுக்கும் COPD பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 

இத்தகைய ஆபத்து கொண்டவர்கள் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது. மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், குடும்பத்தில் யாரேனும் COPD பாதிக்கப்பட்ட மருத்துவ வரலாறு கொண்டவர்களும் ஆண்டுதோறும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

அறிகுறிகள் என்னென்ன?

இருமல், சளி, மூச்சுத்திணறல் மற்றும் இரைப்பு (Wheezing) போன்றவை நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான பொதுவான அறிகுறிகள். சளியில் ரத்தம் கலந்து வருவது புற்றுநோய்த் தாக்கமாகவும் இருக்கக் கூடும் என்பதால், இன்னும் எச்சரிக்கை தேவை.

பரிசோதனைகள் என்ன? 

COPD அறிகுறி கொண்டவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். இதற்கென Pulmonary function tests (PFTs) போன்ற பரிசோதனை முறைகளும், ஸ்பைரோமெட்ரி(Spirometry) என்ற நுரையீரலின் செயல்பாடு பற்றி அறிந்துகொள்ள உதவும் சோதனையும் உள்ளது. தேவையெனில் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கலாம்.

COPD இருப்பது உறுதியானால் இன்ஹேலர் முறையின் மூலம் சிகிச்சையளிக்கலாம். ரத்தசோகை, இதய நோய் போன்ற தீவிரத்தன்மை கொண்ட நோயாளிகளாக இருக்கும்பட்சத்திலும் மருந்துகளின் மூலம் சிகிச்சையளிக்க முடியும். நுரையீரல் முற்றிலும் செயலிழக்கும் நோயாளிகளுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சையை இறுதிக்கட்டமாக மேற்கொள்ளலாம்.

டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா
நுரையீரல் சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult
and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.