காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு நோய்!

காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு நோய்!
July 17 11:01 2023 by admin Print This Article

தொழுநோய் என்றால் என்ன?

மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்த நோய், தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலத்தை பாதிக்கும்.

இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால், இது ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது

தொழுநோய் எப்படி உண்டாகிறது? 

மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் பாக்டீரியம்தான். இதுவே தொழுநோயை உண்டாக்குகிறது. அளவிலும் வடிவிலும் இது காசநோயை (TB) உண்டாக்கும் நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே.

ஒளி நுண்ணோக்கி வழியே கண்டால் இந்த பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்ரோமீட்டர் நீளமும், 0.2 – 0.5 மைக்ரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன.

இந்த நுண்ணுயிரியை நார்வே மருத்துவர் கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன் (Gerhard Armauer Hansen) 1873ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவர் அப்பொழுது தொழுநோய் உற்றவர்களின் தோல் கொப்புளங்களில் குறிப்பாகத் மனிதர்களில் தேடிக்கொண்டிருந்தார். தொழுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி இதுதான். இந்த நுண்ணுயிரியை சோதனைச்சாலையில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இந்த நுண்ணுயிரிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் (மரபணுக்கள் சில) பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது.

நோய் எவ்வாறு பரவும்? 

சிகிச்சை பெறாத நோயாளியே நோய் பரவலுக்கு காரணம்.

தொழு நோயாளியின் உடலில் இருந்து நோய் கிருமி பரவும் முக்கிய வழி சுவாச மண்டலம்.

சிகிச்சை பெறாத தொழுநோயாளிகளிடம் தொடர்ந்து தொடர்பு இருக்கும்போது நோய் உண்டாகும்.

இந்த பாக்டீரியா மூக்கு/வாய் வழியாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. பின்பு அவை நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

நோய் அறிகுறிகள் என்னென்ன? 

* வெளியேறிய தோல் திட்டுக்கள்

* தோல் திட்டுகளில் உணர்வு குறைவு/இழப்பு

* கை அல்லது காலில் உணர்வின்மை

* கால், கைகளில் காயம் அல்லது தீப்புண்(உணர்வின்மை காரணமாக சூடு அறியாமை)

* முகம் அல்லது காது மடலில் வீக்கம்

அறிகுறிகள் தென்பட்டால்..? 

தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுக வேண்டும். தொழுநோய்க்கு மருந்து உண்டு.

பன்மருந்து சிகிச்சையின் (MDT) முக்கியத்துவம் என்ன? 

தொழுநோயை ஒரு தனி மருந்தால் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சை அதாவது எம்.டி.டி (MDT) தொழுநோய் பன்மருந்து சிகிச்சையால் (Antibiotics) குணப்படுத்த முடியும். தொடர்ந்து பன்மருந்து சிகிச்சை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, நோய் பரவலும் தடுக்கப்படுகிறது.

நோய் பரவும் முறை 

இந்நோய் காற்றின் மூலமே அதிகம் பரவும். நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோயுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இது பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்மும்போதும் இருமும்போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகின்றன. இது நாசி வழியாக உள்சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இது நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் பரவுகிறது.

பாதிப்புகள் 

முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூட முடியாத நிலை.

கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்த அளவில் காணப்படுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல்.

கால்: விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல். தாக்கம் அதிகமாயின் உயிரும் இழக்க நேரிடும்.

உலக தொழு நோய் தினம் ஏன்? எப்போது? 

உலக தொழுநோய் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி இறுதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊனமாக்கும் தொழுநோயை விரைவில் ஒழிக்க தீவிர முயற்சிகளையும் புதிய உறுதியையும் மேற்கொள்ள இந்த தினம் உதவுகிறது.

இந்தத் தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?  

தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த… அதன் நோய் அறிகுறிகளை பற்றி மக்கள் அறிய தொழுநோய் குணப்படுத்த முடியும் தகுந்த சிகிச்சை எடுத்து கொண்டால் என்பதை அறியப்படுத்த…

தொழுநோய் பற்றிய மோசமான, தவறான எண்ணங்களை (STIGMA) விலக்க…

Dr. ஏ .எஸ். நிறைமதி MBBS,MD,DNB
சரும மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருச்சி , தென்னூர்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

1 Comment

  1. Vibushan U
    July 31, 06:25 #1 Vibushan U

    Leprosy has treatment. The stigma around this disease has caused an unknown fear among the people.

    Reply to this comment

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.